ஆண்டிப்பட்டி, மார்ச் 4: தேனி மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட கல்குவாரி கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து கட்டுமான பொருட்களுக்கு தேவையான ஜல்லி கற்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிரஷர்களில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு முறையான ஜிஎஸ்டி பில்லுடன் செல்லும் லாரிகளை அதிகாரிகள் மறித்து நடவடிக்கைக்கு உட்படுத்தி வருவதால் தொழில் முடங்கும் அபாயம் உள்ளதாக குவாரி கிரஷர்கள் சங்கத்தின் சார்பில் அரசுக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அந்தந்த குவாரி கிரஷர்களில் கனிம பொருட்கள் இருப்பு மையம் அமைக்க அனுமதி கோரியும், கல்குவாரி கிரஷர் விற்பனையில் நடை சீட்டு நடைமுறையை முறைப்படுத்த கால அவகாசம் கேட்டும், தேனி மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரி கிரஷர், லாரி உரிமையாளர் சங்கம், கட்டுமான சங்கம், பொறியாளர் சங்கம் இணைந்து இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த பிரச்சனை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post கல் குவாரி கிரஷர்கள் இன்று முதல் ஸ்டிரைக் appeared first on Dinakaran.
