அப்போது ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘எனக்கும், முதல்வர் பட்நாவிசுக்கும், துணை முதல்வர் அஜித் பவாருக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது. கூட்டணிக்குள் மோதல், விரிசல், பனிப்போர் ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் (செய்தியாளர்கள்) எழுதினாலும், எங்களது கூட்டணி உடையப் போவதில்லை. வெயில் கடுமையாக இருக்கும் போது பனிப்போர் எப்படி சாத்தியமாக இருக்க முடியும்? எங்களுக்குள் எல்லாம் சரியாகத் தான் செல்கிறது. எங்களுக்குள் இருக்கைகளை மாற்றிக் கொண்டோம். நானும், பட்னாவிஸ் மட்டுமே பதவிகளை மாற்றிக்கொண்டோம். அஜித் பவார் அதே பதவியை தொடர்கிறார். முந்தைய ஆட்சிகாலத்தில் நிலுவையில் இருந்த திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த உள்ளோம். அஜித் பவார் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்வார். எங்களுக்குள் எவ்வித போரும் இல்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம் என்பதை விபரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்’ என்று கூறினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மூவரும் கிண்டலாக மாறிமாறி பதிலளித்தனர்.
The post மகாராஷ்டிராவில் நாளை பட்ஜெட் கூட்டம் கூடுகிறது; கடுமையான வெயிலில் பனிப்போர் சாத்தியமா?: கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு ஷிண்டே கிண்டல் appeared first on Dinakaran.
