சங்கராபுரம், பிப். 27: சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, ஏத்தாப்பூர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் மகேந்திரன்(37). இவர் நண்பரின் காரில் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சங்கராபுரம் வழியாக மீண்டும் சொந்த ஊருக்கு சென்றார். புதுபாலப்பட்டில் இருந்து சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சி சென்றார். அப்போது அந்த வழியாக அரசு பஸ்சினை பரமநந்தம் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி சென்றபோது மூரார்பாளையம் அருகே திடீரென்று பஸ்சினை நிறுத்தினார்.
அப்போது பின்புறமாக கார் ஓட்டி வந்த மகேந்திரன் அரசு பேருந்து மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மகேந்திரன் இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் மகேந்திரன் மனைவி ரேவதி அளித்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகமது முஸ்தபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post அரசு பேருந்து மீது கார் மோதி ஓட்டுநர் பலி appeared first on Dinakaran.
