சீர்காழி,பிப்.21: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சீரடி சாய்பாபா தியான ஆலயத்தில் வியாழக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை மகா ஹோமம், தொடர்ந்து பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆர்த்தி நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சாய்பாபா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
The post சீர்காழி சீரடிசாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.
