மேகாலயாவை தொடர்ந்து அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்!

ஷில்லாங்: மேகாலயாவில் நேற்று இரவு 11.43 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகவில்லை. இதைதொரந்து, அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

காலை 8.49 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் 75 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 5.57 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.07 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

முன்னதாக, கடந்த 8ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேகாலய மாநிலத்தில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயாவில் காரோ மலையில் காலை 11.32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியது. மேகாலயாவில் ஏற்கனவே நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

The post மேகாலயாவை தொடர்ந்து அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: