அதன்படி, இந்தியாவில் உற்பத்தி ஆலையை தொடங்கும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை, எலான் மஸ்க் நேரில் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது கிளைக்கு ஆட்கள் தேவை என அதன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வணிக செயல்பாடு ஆலோசகர், சர்வீஸ் மேனேஜர், சர்வீஸ் டெக்னீஷியன் என 13 பிரிவுகளில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இது டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைய இருப்பதை உறுதிபடுத்தி உள்ளது.
The post மோடி-மஸ்க் சந்திப்பு எதிரொலி வேலைக்கு ஆள் எடுக்க தொடங்கியது டெஸ்லா: இந்திய சந்தையில் நுழைகிறது appeared first on Dinakaran.
