டூவீலர் விபத்தில் கொடைக்கானல் வாலிபர் படுகாயம்

தேவதானப்பட்டி, பிப். 15: கொடைக்கானல் மேல்மலை கிராமம் மன்னவனூர் கும்பூரை சேர்ந்தவர் வீரபாண்டி (18). இவர் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காட்ரோடு அருகேயுள்ள பிரபல ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீரபாண்டி டூவீலரில் காட்ரோட்டில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் போது பின்னால் வந்த கார் மோதியதி விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த வீரபாண்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓட்டல் மேலாளர் கெங்குவார்பட்டியை சேர்ந்த அரவிந்த் (30) புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மதுரை பொன்னேரியை சேர்ந்த பிச்சைமுத்து (34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் கொடைக்கானல் வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: