அன்னூர்,பிப்.12: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் சுதாகர் (40). இவர் கோவை கீரணத்தம் பகுதியில் தங்கியிருந்து சொந்தமாக கால் டாக்சி வைத்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுதாகர் அதே பகுதியில் டிரைவராக வேலை பார்க்கும் ராஜா என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று சுதாகர் ராஜாவை செல்போனில் அழைத்து தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டுள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜா, சுதாகரை தகாத வார்த்தைகளால் பேசி, சுதாகரின் வீட்டிற்கு வந்து அவரை தாக்கி, கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் பலத்த காயமடைந்த சுதாகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
The post கொடுத்த கடனை கேட்டவருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.
