தீவிரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று வழக்கம் போல் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் பட்டால் பகுதியில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது தீவிரவாதிகளால் புதைத்துவைக்கப்பட்டு இருந்த சக்திவாய்ந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. இதில் காயமடைந்த மூன்று வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு கேப்டன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

The post தீவிரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: