அழகர் கோயில் சாலை விரிவாக்க திட்டம் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் துவக்கம்

 

மதுரை: அழகர் கோயில் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் துவங்கின. மதுரை பெரியார் பஸ் நிலையம் துவங்கி அழகர் கோயில் வரையிலான, 21 கி.மீ தூர சாலையை வாகன போக்குவரத்து அதிகரித்ததன் காரணமாக, நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது. ஏற்கனவே, பெரியார் பஸ் நிலையம் துவங்கி அப்பன்திருப்பதி வரை விரிவாக்க பணிகள் நடந்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் அடுத்தகட்டமாக, கள்ளந்திரி பாலத்திற்கு முன்பிருந்து அழகர் கோயில் கோட்டை வாசல் வரை சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள ரூ.22 கோடியில் கடந்த, 27ம் தேதி பூமிபூஜை போடப்பட்டது. இதன்படி, முதற்கட்டமாக அழகர்கோயில் சாலையில் பொய்கைகரைபட்டியிலிருந்து நத்தம் செல்லும் சாலை பிரிவிற்கு அருகே துவங்கி 275 மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் துவங்கி உள்ளன. இதில் முதற்கட்டமாக தூண்கள் எழுப்ப தேவையான எண்ணிக்கையில் குழிகள் தோண்டும் பணிகள் நடக்கின்றன. அடுத்தகட்டமாக திட்டத்திற்காக அகற்றப்பட உள்ள மரங்களை ஏலம் விடும் பணிகள் நடைபெற உள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

The post அழகர் கோயில் சாலை விரிவாக்க திட்டம் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories:

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை, ஏப் 1: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45) என்பவரை, பூந்தமல்லி (தனி) தொகுதி தவெக வேட்பாளராக, கட்சி தலைவர் விஜய், கடந்த 29ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற போது, திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.