அமைச்சர் முத்துசாமி காரில் பறக்கும் படை சோதனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மணல் மேடு, கிராமடை, டீசல் செட், சென்னிமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். பின்னர், தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு, அவரது காரில் முகாம் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

பெரியார் நகர் வளைவு அருகே வந்தபோது அமைச்சர் சு.முத்துசாமியின் கார் மற்றும் அவரை பின் தொடர்ந்து வந்த திமுக விவசாய அணியின் இணை செயலாளர் குறிஞ்சி சிவக்குமார் ஆகியோரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு அமைச்சரும், திமுக நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். காரில் பணமோ, பரிசு பொருட்களோ இல்லாததால் பறக்கும் படையினர் காரை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.

The post அமைச்சர் முத்துசாமி காரில் பறக்கும் படை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: