இதுபோல கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு காலை 11.10, பகல் 1.45, 1.50, மாலை 5.25, இரவு 8.35 நேரங்களில் வரவேண்டிய 5 விமானங்கள் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவது, பயணிகள் பாதுகாப்பு காரணமாக விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதுகுறித்து ஏற்கனவே பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனாலும் பயணிகள் விமானங்கள் தாமதம் காரணமாக பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். குறிப்பாக டிரான்சிட் பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய விமானத்தை தவற விட்டுவிட்டு அவதிக்குள்ளாகினர்.
The post கொல்கத்தாவில் கடும் பனி மூட்டம் 11 விமானங்கள் தாமதம் appeared first on Dinakaran.