இந்நிலையில் தங்கவேலு இன்று அதிகாலை தனது நிலத்திற்கு சென்றபோது அங்கு யானைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பேரணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் அப்பகுதி மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் நீண்ட நேரம் போராடி விரட்டியடித்தனர். இதையடுத்து இன்று காலை வனவர் முரளி, விஏஓ தனசேகரன் உள்ளிட்டோர் சேதமான விவசாய நிலத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சேதமான பயிர்களுக்கு அதிகாரிகள் இழப்பீடு பெற்று தர வேண்டும். அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதையும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை நிரந்தரமாக தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
The post பேரணாம்பட்டு அருகே அதிகாலை விவசாய நிலத்தில் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்: சோளம், வாழைபயிர்கள், மின்கம்பம் சேதம் appeared first on Dinakaran.
