அதன்படி தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட எம்.ஆர்.சி நகர், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட ஈக்காட்டுதாங்கல், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட வளசரவாக்கம் (பகுதி), ராமாபுரம், ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட முகலிவாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு, வேளச்சேரி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கவுல் பஜார், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
The post தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கவுல் பஜார், பொழிச்சலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.
