கள்ளக்குறிச்சியில் ரூ.153 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டப்பட்ட அறிக்கை: 21 வார்டுகளை உள்ளடக்கி 15.87 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள கள்ளக்குறிச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த 2024-2025ம் ஆண்டின் சட்டமன்ற மானிய கோரிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி நகராட்சியில் ரூ.153.86 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்தவும், ரூ.20.93 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை 10 வருடங்களுக்கு இயக்கவும் மற்றும் பராமரிக்கவும், ரூ.6.84 கோடி செலவில், கழிவுநீர் சேகரமாகும் அமைப்புகளை 5 வருடங்களுக்கு பராமரிக்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கள்ளக்குறிச்சியில் ரூ.153 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: