பூக்கள் விலை கடும் சரிவு

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஓசூர், தேன்கனி கோட்டை, சேலம், கடப்பா மற்றும் கர்நாடகா பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில நாட்களாக பூக்கள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலை சரிந்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட ஐஸ் மல்லி ரூ.250க்கும் முல்லை, ஜாதிமல்லி ரூ.240க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், அரளி ரூ.100க்கும், சாமந்தி ரூ.50க்கும், சம்பங்கி ரூ.30க்கும், பன்னீர்ரோஸ் ரூ.70க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post பூக்கள் விலை கடும் சரிவு appeared first on Dinakaran.

Related Stories: