துக்க வீட்டுக்குச் சென்ற ரவுடிக்கு சரமாரி வெட்டு: 4 சிறுவர்களுக்கு போலீஸ் வலை

திருவொற்றியூர்: காசிமேடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (எ) சாண்டி (24), ரவுடி. இவர்மீது பல்வேறு வழக்குகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம், காசிமேடு ஆகிய காவல்நிலையங்களில் உள்ளன. நேற்று முன்தினம் வஉசி நகரைச் சேர்ந்த இவரது நண்பரான ஹரிஷ்குமார் என்பவர் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிரவீன் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த 4 சிறுவர்கள் ஏற்கனவே இருந்த முன்விரோதத்தால் கத்தியால் பிரவீனை சுற்றிவளைத்து தலை, கையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரவீனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வஉசி நகரைச் சேர்ந்த சஞ்சய் என்பவரின் தம்பி குப்பன் என்பவரை போதையில் பிரவீன் தாக்கியுள்ளார். அதற்கு பழிவாங்கவே சஞ்சய் மற்றும் நண்பர்கள் 4 பேர் பிரவீனை வெட்டியது தெரிந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

The post துக்க வீட்டுக்குச் சென்ற ரவுடிக்கு சரமாரி வெட்டு: 4 சிறுவர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: