வேதாரண்யத்தில் சாலை தூய்மை பணி

வேதாரண்யம், அக். 23: வேதாரண்யம் தாலுக்காவில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. கனமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருமளவில் தேங்கியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் சுரேஷ் உதவி பொறியாளர் மதன் அறிவுரைகளின் படி சாலை பணியாளர்கள் உடனடியாக பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சாலையின் ஓரத்தில், தேங்கிய மழை நீரை வெட்டி வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சாலையின் இருபுறமும் உள்ள புற்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

The post வேதாரண்யத்தில் சாலை தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: