சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதலே இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. காசிமேடு, ராயபுரம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி, ஆலந்தூர், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், எழும்பூர், வேளச்சேரி, புரசைவாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

 

 

The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை! appeared first on Dinakaran.

Related Stories: