கொடைக்கானலில் டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி

கொடைக்கானல் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் ராகேஷ் (27). இவர் தனது நண்பருடன் கொடைக்கானலை சுற்றி பார்க்க டூவீலரில் சுற்றுலா வந்துள்ளார். நேற்று காலை பள்ளங்கி கோம்பை அருகே பசும்பொன் கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார், இவரது டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலரை ஓட்டி வந்த ராகேஷ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது நண்பர் படுகாயமடைந்தார். மோதிய வேகத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்ததும் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது நண்பரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கொடைக்கானலில் டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: