பைக் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பலி

 

பாலக்காடு, அக். 16: ஆலுவா அருகே ஏலூர் பகுதியில் பைக் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இடுக்கி மாவட்டம் கம்பிளிக்கண்டத்தை சேர்ந்தவர் ராஜனின் மகன் ராகுல் ராஜ் (22), கோழிக்கோடு மாவட்டம் வடகராவை சேர்ந்தவர் ரமேஷின் மகன் ஆதிஷ் (21). இவர்கள் ஆலுவாவிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி மெக்கானிக்காக பணி புரிந்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் களமச்சேரியிலிருந்து பைக்கில் ஆலுவாவிற்கு சென்றனர். அப்போது எதிராக வந்த லாரி இவர்களது பைக் மீது நேருக்குநேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 2 வாலிபர்களும் படுகாயமடைந்தனர். இவர்களை போலீசார் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஆலுவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: