தகவல் தொடர்பு, ஊடகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று கூடலூர் மாணவி சாதனை

 

கூடலூர், அக் 16: தகவல் தொடர்பு, ஊடகவியல் துறையில் கூடலூர் மாணவி முனைவர் பட்டத்தை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கூடலூர் மாணவி மோனிஷா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம் பெற்றார். நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காளம்புழா பகுதியில் வசிப்பவர் மைக்கேல் ராஜ். வியாபாரியான இவரது மகள் மோனிஷா.

கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை முடித்த இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்று தற்போது தகவல் தொடர்பு மற்றும் ஊடகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு கவர்னர் என்.ஆர். ரவியிடம் பட்டம் பெற்றார். இதையடுத்து, ஊடகவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக இந்த துறையை தேர்ந்தெடுத்ததாகவும் மாணவி மோனிஷா தெரிவித்துள்ளார்.

The post தகவல் தொடர்பு, ஊடகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று கூடலூர் மாணவி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: