திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக காந்திநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் நிலைத்தடுமாறி சாக்கடை கால்வாயில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அவரை உயிருடன் மீட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.