பயணிகள் உயிரை காக்க உருப்படியான நடவடிக்கை எடுங்கள்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: மோடி ஆட்சியில் மீண்டும் ஒரு ரயில் விபத்து. தாமதமாக சென்றாலும் பத்திரமாக ரயில் பயணிகள் தமது ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மனநிலையிலேயே உள்ளார்கள். பயணிகளுக்குத் தேவை வந்தே பாரத்தோ புல்லட் ரயிலோ அல்ல. பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களுக்கு மோடி அரசு நிதி கணிசமாக ஒதுக்கி முன்னுரிமை வழங்க வேண்டும். ரயில் விபத்துகளில் சாதனைகளை நிகழ்த்தி வரும் மோடி அரசு விளம்பர ரயில் திட்டங்களை ஒதுக்கி விட்டு ரயில் பயணிகளின் உயிர்களைக் காக்க உருப்படியான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பயணிகள் உயிரை காக்க உருப்படியான நடவடிக்கை எடுங்கள்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: