இஸ்ரேலுக்கு அணு ஆயுதம் வழங்கிய ஒன்றிய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம், அக்.11: இஸ்ரேல் இனபடுகொலைக்கு அணு ஆயுதம் வழங்கும் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நாகப்பட்டினம் அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர்கள் மாரிமுத்து, சிவகுருபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாநில குழு உறுப்பினர் நாகை மாலி முன்னிலை வகித்தார். பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலையை இஸ்ரேல் அரசு நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

The post இஸ்ரேலுக்கு அணு ஆயுதம் வழங்கிய ஒன்றிய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: