மாறுதல் தரும் மாற்று மருத்துவங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்று உலக அளவில் சர்வதேச மருத்துவம் என்றால் அது அலோபதிதான். மேலும், உலகம் முழுக்க பல்வேறு பண்பாடுகளில் பலவகையான மருத்துவ முறைகள் பாரம்பரியமாய் இருந்து வருகின்றன. இவை இன்று மாற்று மருத்துவம் என்ற பெயரில் அலோபதிக்கு மாற்றாக முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் இந்தியாவில் பிரதானமாய் இருக்கும் மூன்று மருத்துவ முறைகள் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

ஆயுளைக் காக்கும் ஆயுர்வேதம்!

நோயறிதல்

ஆயுர் வேதத்தில் உடல் பரிசோதனையில் எப்போதும் தனி குறிப்பிட்ட உறுப்பை மட்டும் பரிசோதிக்காமல் முழு உடலையும் பரிசோதிப்பார். மருத்துவர் மிக கவனமாக நோயாளிகளின் உடல் உறுப்புகளில் செயல், மனநிலை ஒழுங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்துவர் பாதிக்கப்பட்ட உடல் திசுக்கள், உடல் உறுப்புகளில் எந்த நோய் எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது. எந்த தளத்தில் அமைந்துள்ளது என பரிசோதனை செய்வர். உடலின் மூலக்கூறு (திசுக்கள்)இருப்பிடம், தினசரி வேலை முறை, உணவு பழக்கவழக்கங்கள் சமூக பொருளாதார மற்றும் நோயாளியின் சுற்று சூழல், போன்ற நிலைமைகளுக்கு கீழ்கண்டவாறு பரிசோதனையில் செய்யப்படுகிறது:

*பொது உடல் பரிசோதனை
*துடிப்பு பரிசோதனை
*சிறுநீர் பரிசோதனை
*மலம் பரிசோதனை கண்கள் மற்றும் நாக்கு பரிசோதனை
*தொட்டு உணரக்கூடிய மற்றும் செவிப்புலன் செயல்பாடு பரிசோதனை ஆகும்.

சிகிச்சை

அடிப்படையாக சிகிச்சை முறை தனிமைப்படுத்தி அணுகுவது ஆகும். இப்படி நோயாளியை தனிமையாக்கி சிகிச்சை அளிக்கும் மருத்துவரால், இயல்பாக சுதந்திரமாக நோயாளியை நோயில் இருந்து விடுவித்து உடல் நலத்தை அளிக்கிறார். ஆயுர்வேதாவின் உயர் பணி குறிக்கோள் உடல் நலத்தை பேணி, நலத்தை மேம்படுத்தி, நோய்தடுப்பு, நோயை குணமாக்குதல் ஆகும். ஒவ்வொரு உடலிலும் நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை -நோய் உண்டான காரணம், உண்டான இடம், பஞ்சகர்ம விதிமுறைகளின்படி மருந்துகள், சரியான உணவு பழக்கம், செயல் மற்றும் நடப்பு முறை, சமநிலையை திரும்ப அடைதல், உடலை வலிமையாக்குதல் போன்றவைகளை கூடிய வரை எதிர் காலத்தில் சரி செய்ய முடியும்.

சிகிச்சை பொதுவாக மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது, குறிப்பிட்ட உணவு கட்டுப்பாடு, பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடு இந்த மூன்று நடவடிக்கைகளை பயன்படுத்த இரண்டு வழிகள் கையாளப்படுகிறது. முதல் அணுகு முறையானது நோய் எதிர்ப்பு தூண்டுதலை கணக்கிட்டு, நோயின் காரணத்தின் உண்மையை கண்டறிந்து நோயின் வெளிப்பாடுகள் வைத்து கையாளப்படுகிறது. இரண்டாவது அணுகுமுறையில் மருந்து, உணவு மற்றும் செயல்பாடு ஆகிய மூன்று நடவடிக்கைகளை கொண்டு நோய்களுக்கான காரணிகள் மற்றும் வெளிப்பாடுகள் போன்ற விளைவுகளை சரி செய்ய கையாளப்படுகிறது. சிகிச்சை அணுகு முறைகளை இந்த இரண்டு வகையான முறையே “விப்ரீட்டர்”மற்றும் ‘விப்ரீட்டத்தகரி’ சிகிச்சைகள் எனப்படுகின்றன.

தமிழ் கண்ட சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும். பண்டை சித்தர்கள், இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அனுபவ அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

இயற்கையில் கிடைக்கக்கூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து முதலிய மூலிகைப் பொருட்களைக் கொண்டும், நவரத்தினம், நவலோகங்கள், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம் முதலிய தாதுப் பொருட்களைக் கொண்டும், சங்கு, பலகறை, நண்டு முதலிய சீவப் பொருட்களைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர் முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியன கொண்டும், தெங்கு, புங்கு, புன்னை, வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.

சித்தர்கள் மனித சரீரத்தை மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்கக் காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பன்னிரண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது.

நாம் உண்ணும் உணவே உயிர் உடலிலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன. நம் உடலில் வளி, அழல் மற்றும் ஐயம் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.

வாதம் சம்பந்த பிணிகள்

வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்கள் உள. நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

பித்தம் சம்பந்த பிணிகள்

பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்கள் உள. செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

சிலேத்துமம் சம்பந்த பிணிகள்

சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானவை. அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடிமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

மருந்து

சித்த மருத்துவத்தில் உள் மருந்து 32, வெளி மருந்து 32 என 64 வகை மருந்து வடிவங்கள் (forms of medicine) உள்ளன. திருமூல சித்தரின் கூற்றுப்படி மருந்து என்பது உடல், உள்ளத்தின் நோய்களைப் போக்குவதுடன், நோய்களை வராமல் தடுப்பதும், மற்றும் சாவையும் வர ஒட்டாமல் தடுப்பதாக இருக்கவும் வேண்டும். இப்படிப்பட்ட மருந்துகளை சித்த மருத்துவத்தில் பரவலாகக் காணலாம். அகமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் மிக விரிவாக திருமூலரால் சொல்லப்பட்டுள்ளது.

ஐரோப்பியத்தின் ஹோமியோபதி!

இம்மருத்துவமுறை நோயுற்றோருக்கு, மனரீதியாகவும், சிந்தனையிலும், ஆன்மீக துறை மற்றும் உடல்நிலையில் சமநிலையினை உண்டாக்குகிறது. ஹோமியோபதி என்கின்ற வார்த்தை கிரேக்கசொல்லான “ஹோமோ” என்பது “ஒத்த மாதிரியான” மற்றும் “பேத்தோ:” என்பது “வேதனை” எனும் அர்த்தம் தரும் சொல்லிலிருந்து வந்தது ஆகும்.

ஹோமியோபதி என்பது குறைந்த அளவான மருந்து கொடுத்து நோய்களை குணமாக்குவது ஆகும். இந்த சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்படாது. இயற்கையின் விதியின் அடித்தளமான “விருப்பத்தை விருப்பம்மூலம் குணப்படுத்துதல்”எனும் இந்த அறிவியல் தத்துவத்தை டாக்டர். சாமுவேல் ஹானிமேன் என்பவர் விளக்கினார். உடல்நலம் குன்றிய மக்களுக்கு கடந்த இருநூறு ஆண்டுகளாக நோயை நீக்கி சுகத்தை அளித்துக்கொண்டு வருகிறது.

ஹோமியோபதி மாத்திரைகள்

நோயாளிகளுக்கு குறிப்பிட்ட நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்தானது குறிப்பிட்ட நெறிமுறைகளின்படி தயார் செய்யும் பொருள் என கூறலாம். இதை மருந்து என்றோ, மாத்திரை என்றோ, வலிநிவாரணி என்றோ கூறமுடியாது. நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் இந்த பொருள் நோயிலிருந்து விடுபட வைக்கிறது.ஹோமியோபதி மருத்துவர்கள் இரண்டு முறைகளில் நோயாளியின் நோயினை பகுத்து மருந்துகளை வழங்குகிறார்கள். இதனை மெட்ரியா மெடிக்கா மற்றும் ரெப்பரியட்யோரில் என
கூறுவதுண்டு.

ஹோமியோபதி

மெட்ரியா, மெடிக்கா மருத்துவ வகைப்படுத்தி ஆங்கில வரிசையில் குறிப்பிட்டுள்ளனர். இதனை நிவாரண அறிகுறி வகையால் வரிசைப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஹோமியோபதி பகுப்பில் நோய்களை வகைப்படுத்தியும், வரிசைப்படுத்தியும் அதற்கான அறிகுறிகளையும் சேர்த்து அதற்கான நிவாரணியையும் குறிப்பிட்டிருப்பர்.

ஹோமியோபதி விலங்குகள் தாவரம், தாதுக்கள், செயற்கையான பொருட்கள் ஆகியவற்றில் இருந்து வரும் பொருள்கள் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. சோடியம் குளோரைடு அல்லது சமையல் உப்பு அல்லது பாம்பின் விஷம் ஒபியம் மற்றும் தைரோடினம் மற்றும் ஹோமியோபதி முறையில் “நோசோட்ஸ்”முறை அதாவது நோயுற்ற பொருட்களால் ஆன மலம், சிறுநீர், சுவாச உறுப்புகளின் கழிவு, இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதனை ஆரோக்கியமான விலங்குகளில் இருந்து எடுத்தால் “சாரகோட்ஸ்”என்று கூறுவர்.

தயாரிக்கும் முறை

ஹோமியோபதி மருந்து தயாரிக்க ஓடு, உரல் மற்றும் அம்மி பயன்படுத்தப்படுகிறது. உரலில் உலக்கை மூலம் இடித்து கடைதல், அம்மியில் அரைக்கும் கல்லை வைத்து அரைத்து மருந்து தயாரிக்கப்படுகிறது.ஹோமியோபதி முறையில் மருந்து தயாரிப்பவர்கள் “டைனமைசேசன்”அல்லது “பொட்டன்சியேசன்” என்ற முறையில் ஆல்கஹால் அல்லது சுத்தமான நீரில் கலந்து நெகிழ்ச்சியான வளைந்து கொடுக்கக்கூடிய புட்டியில் போட்டு அதனை வேகமாக பத்துமுறை ஆட்டி அசைத்துக்குலுக்கி கொடுப்பர். இதனை “சக்சன்”என்பர்.

டாக்டர். சாமுவேல் ஹானிமேன் கூறும் போது நோயை குணமாக்க கொடுக்கக்கூடிய மருந்தானது அதன் அதிகரிக்கப்பட்ட வீரியத்தால் பக்கவிளைவுகள் உண்டாக்க நேரிடும். இதனை தவிர்க்க வீரியத்தை குறைக்க வேண்டும். இதற்காக ஹானிமேன் புதிய கண்டுபிடிப்பை உண்டாக்கினார் இது குதிரை இறக்கை போன்று தோலினால் செய்யப்பட்டது ஆகும். ஒருபுறம் குதிரை முடியினால் மூடப்பட்டிருந்தது. இதனுள் குவார்ட்டிஸ், சிற்பி ஓடு ஆகியவைகளை சர்க்கரை கலந்து அரைத்தனர். இதனை “டிரைட்டியுசன்” என அழைத்தனர்.

வீரியப்படுத்தும் முறை

டாக்டர். சாமுவேல் ஹானிமேன் ஹோமியோபதி மருத்துவத்தில் லாக்ரதமிக் தகுதி அளவுகளை பயன்படுத்தினார். அவர் “சி” அளவுமுறையை உருவாக்கி, இதன் மூலம் அம்மருந்தினை ஒன்றுக்கு நூறு என வீரியத்தை குறைத்தார். மற்றும் “2சி’’ முறையால் மருந்தின் வீரியத்தை நூறு மடங்காக குறைத்து, அதன்பின்னர் அதனை மீண்டும் நூறுமடங்காக குறைத்து, ஆக இம்முறையில் 10, 000 முறையாக அதன் வீரியத்தை குறைத்தார். இது போன்று “6சி” என்பது ஒருமருந்தினை இம்முறையால் ஆறுமுறை அதன் அடர்த்தியை குறைப்பதாகும். இதன் மூலமாக மூலப்பொருள் 100X6=10X12 ஓர்பகுதி ஒருடிரில்லியனாக மாறுகிறது(1/1,000,000,000, 000) இவ்வாறு மருந்தின் வீரியத்தை அதிகமாக குறைக்க முடியும்.

ஹோமியோபதி முறையால் ஒரு திரவத்தின் அடர்த்தியை குறைக்கும் பொழுது அது வீரியமாகிறது. அதனால் அந்த மருந்துகள் சுகம் தருகிறது. இம்முறையால் அடர்த்தியில்லாத மருந்து சுத்தமான நீர், சர்க்கரை, சாராயம் போன்று உள்ளது.டாக்டர். சாமுவேல் ஹானிமேன் நிறைய தேவைகளுக்கு 30சி அடர்த்தியினை பயன்படுத்தினார்கள். மருந்துகளை எண்ணமுடியாத அளவுக்கு அடர்த்தியினை குறைத்தார்கள். இதன் மூலம் அணு அல்லது மாலிக்குள் அல்லது மிகச்சின்ன வேதியியல் பொருளாக உண்டு பண்ணி பயன்படுத்தினார்கள். ‘‘12சி’’முறையில் ஒரு மாலிக்குகளில் குறைக்கும் முறை விரும்பத்தகுந்த காரணத்திற்கு வழிவகுத்தது.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

The post மாறுதல் தரும் மாற்று மருத்துவங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: