நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்: முரசொலி செல்வத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன் என முரசொலி செல்வத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது. கலைஞரின் மூத்த பிள்ளை முரசொலியின் பணிகளை தன் தோளில் சுமந்து இளமைப் பருவம் முதலே திறம்பட செயலாற்றியவர் . திமுகவின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராக பொறுப்பேற்று தன் எழுத்துக்களால் ஜனநாயக குரலாக ஒலித்தவர் என்றும் முதலமைச்சர் உருக்கம் தெரிவித்தார்.

The post நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்: முரசொலி செல்வத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: