மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் பள்ளிக்கு வந்த +2 மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி வயது (17) காலை பள்ளிக்கு வந்த நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். மாணவியை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.