திராவிட இயக்க அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு இருப்பதால் தமிழர்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள், அதனால்தான் அங்கு மதச்சார்பின்மை கொள்கை வெற்றி பெற்றுள்ளது என்று ராகுல்காந்தி கூறியபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். பிறகு எனது மகளின் திருமண அழைப்பிதழை அவரிடம் கொடுத்ததும், மகிழ்ச்சிப் பொங்க எங்கள் குடும்பத்தை பற்றியும், மகன், மகளைப் பற்றியும் கேட்டறிந்தார்.
அதேபோன்று, டெல்லியில் நேற்று மாலை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து திருமண அழைப்பிதழை அளித்தேன். வைகோவின் உடல் நலனை விசாரித்தார். எனது குடும்பத்தினர் மற்றும் மணமக்களைப் பற்றியும் கேட்டுவிட்டு, மணவிழாவுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
The post ராகுல், சந்திரபாபு நாயுடுவுடன் துரை வைகோ சந்திப்பு appeared first on Dinakaran.