குழந்தைகள் ரப்பர் டியூப் மூலமாக நீச்சல் அடித்து உற்சாகமாக குளித்தவாறு இருந்தனர். அப்போது சிறுமி கன்சிகா திடீரென நீரில் மூழ்கினாள். இதனை குளித்துக் கொண்டு இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து கன்சிகாவை தேடும் போது நீரில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு புளியங்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி கன்சிகா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்ததையடுத்து புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீச்சல் குளத்தில் குளித்த சிறுமி பெற்றோர் கண் முன்பே நீரில் மூழ்கி பலியான சம்பவம் ரத்தனபுரி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
The post புளியங்குடி அருகே பரிதாபம் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி appeared first on Dinakaran.