ஜெயங்கொண்டம் அருகே மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி

 

ஜெயங்கொண்டம் , அக்.5: ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டி பகுதியில் காற்றுடன் கூடிய மழை,மின்னல் தாக்கியதில் இரண்டு ஆடுகள் பலியானது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கிராமம் அருகே உள்ள மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (55). இவருடைய மனைவி வசந்தா(50). இவர்கள் இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் கூலி வேலைக்கு சென்று திரும்பிய வசந்தா தான் வளர்த்து வரும் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.

மாலை 5 மணியளவில் லேசான மழை தூறல் வந்ததால் ஆடுகள் வீட்டிற்கு வந்தது. வீட்டின் அருகே வழக்கம்போல் ஆடுகளை கட்டி உள்ளார். பின்னர் வசந்தா வீட்டிற்குள் சென்றார். அப்போது திடீரென இடி மின்னல் சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அங்கு இரண்டு ஆடுகள் மின்னல் தாக்கியதில் இறந்து போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து பார்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: