பதவி உயர்வு வழங்கக்கோரி அங்கன்வாடி சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

 

திருப்பூர், அக்.5: 10 ஆண்டு பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மினி மையம் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் ஊழியர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் சித்ரா தலைமை தாங்கி பேசினார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சித்ரா, சிஐடியு மாநில நிர்வாகி அனிதா, சிஐடியு இணைச் செயலாளர் எல்லம்மாள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post பதவி உயர்வு வழங்கக்கோரி அங்கன்வாடி சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: