திண்டுக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல், அக். 5: திண்டுக்கல்லில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பத்மாவதி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்வ தனபாக்கியம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 5 ஆண்டுகள் பணி முடித்த குறுமைய பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். உள்ளூர் மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: