நிலக்கோட்டை பள்ளபட்டியில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்: உடனே அகற்ற கோரிக்கை

 

நிலக்கோட்டை, அக். 5: நிலக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளபட்டி ஊராட்சி நகர் பகுதியிலிருந்து சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக சிப்காட் தொழிற்பேட்டைக்கு பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

மேலும் இந்த குப்பைகளை தினமும் தீ வைத்து எரிப்பதால் இச்சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பள்ளி குழந்தைகள், தொழிற்பேட்டை தொழிலாளர்கள், விவசாயிகள் என பலரும் கண் எரிச்சல், தும்மல், இருமல் உள்ளிட்ட பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர்.

மேலும் தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் தொடர்ந்து கொட்டப்படும் குப்பை கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன், குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post நிலக்கோட்டை பள்ளபட்டியில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்: உடனே அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: