ஆன்லைன் மூலம் பதிவு செய்து அரசு பேருந்தில் பயணித்த 13 பேருக்கு பரிசு தொகை: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

சென்னை: ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து அரசு பேருந்தில் பயணித்த 13 பேருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் தொலைதூர பேருந்துகளில், www.tnstc.in, TNSTC செயலி ஆகியவை மூலமாக பயணச் சீட்டு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் விதமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் பயணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் ஜூன் 2024 முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் 3 பயணிகளுக்கு ₹10 ஆயிரமும், இதர 10 பயணிகளுக்கு ₹2 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி செப்டம்பர்-2024 மாதத்திற்கான 13 பயணிகளை கணினி குலுக்கல் முறையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேர்வு செய்துள்ளார். இவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆன்லைன் மூலம் பதிவு செய்து அரசு பேருந்தில் பயணித்த 13 பேருக்கு பரிசு தொகை: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: