மாநகர பேருந்தில் பயணி திடீர் மரணம்

பெரம்பூர்: அயனாவரத்தில் இருந்து பிராட்வே செல்வதற்காக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று மதியம் 12 மணியளவில் மாநகர பேருந்தில் (தடம் எண் 35) ஏறினார். கண்டக்டர் அருண்குமார் அவருக்கு பயணச்சீட்டு வழங்கி இருக்கையில் அமர வைத்தார். பேருந்து ஓட்டேரி மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென அந்த முதியவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக கண்டக்டர் ஓட்டேரி காவல் நிலையம் முன்பாக பேருந்தை நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வந்து முதியவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தபோது டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு, முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்து போனவர் கருப்பு நிற பேண்ட் மற்றும் பிங்க் நிறத்தில் கோடு போட்ட சட்டை அணிந்துள்ளார். இறந்தவர் யார் என்பது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாநகர பேருந்தில் பயணி திடீர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: