திமுக மாணவரணி பொறுப்புகளுக்கான நேர்காணல்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய நகர, பகுதி, பேரூர் திமுக மாணவரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேர்காணல் திருவள்ளூர் அடுத்த காக்களூரில் நடைபெற்து. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வே.தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த நேர்காணலை தமிழக அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழும் தமிழர் நலத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், மாநில மாணவரணி இணைச் செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன், மாணவரணி துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், வி.ஜி.கோகுல் ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினர்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், பொன்.விமல், ப.சிட்டிபாபு, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் ஆர்.ஜெயசீலன், சன்.பிரகாஷ், சே.பிரேம் ஆனந்த், ப.ச.கமலேஷ், ஜி.ஆர்.திருமலை, ஜி.நாராயண பிரசாத், ஜி.ராஜேந்திரன்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக மாணவரணி பொறுப்புகளுக்கான நேர்காணல்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: