சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மலையாள நடிகை பலாத்காரம்: டைரக்டர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் மீது கூறப்படும் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பரபரப்புக்கு இடையே மேலும் ஒரு நடிகை டைரக்டர் மீது பலாத்கார புகார் கூறியுள்ளார். கண்ணூரைச் சேர்ந்த இந்த நடிகை ஜேம்ஸ் கேமரூன் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மலப்புரம் மாவட்டம் பூச்சால் என்ற பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் (31) என்பவர் இந்தப் படத்தை டைரக்ட் செய்தார். ஆனால் இந்த படம் இதுவரை வெளியாகவில்லை. மேலும் பல படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகையை ஷாஜகான் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் ஷாஜகானுக்கு எதிராக நடிகை கொச்சி போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார் ஷாஜகானை கைது செய்தனர்.

The post சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மலையாள நடிகை பலாத்காரம்: டைரக்டர் கைது appeared first on Dinakaran.

Related Stories: