கோயம்பேட்டில் சாலை ஆக்கிரமித்த ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட தனியார் டிராவல்ஸ் பஸ், வேன், கார் மற்றும் ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் சாலையை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தப்பட்டுவந்தது. இதன்காரணமாக வாகனங்கள் செல்லமுடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசாரிடம் வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், கோயம்பேடு போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரம் நேற்றிரவு ஆய்வு செய்தார்.

அப்போது கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்துக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுந்தரம் கூறுகையில், ‘’கோயம்பேடு சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். சாலையை ஆக்கிரமித்து நின்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு கூட அபராதம் விதித்து வருகிறோம். கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆம்னி பேருந்துகள் வரிசையாக நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதுபோல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

 

The post கோயம்பேட்டில் சாலை ஆக்கிரமித்த ஆம்னி பஸ்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: