திமுக செயல்வீரர் கூட்டம்

சிவகங்கை, செப்.29: சிவகங்கையில் நகர் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர், நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வது மற்றும் கழக உறுப்பினர் சேர்க்கை என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் கார்க்கண்ணன், நகர அவைத்தலைவர் மதார், மாவட்ட பிரதிநிதி ஜெயகாந்தன், நகர் துணை செயலாளர்கள் வீனஸ் ராமநாதன், சரவணன், அமுதா பாண்டியன், மாவட்ட பிரதிநிதி வீரகாளை, நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ராஜபாண்டியன், ராம்தாஸ் வட்ட செயலாளர்கள் ராஜாசெல்வதீன், சேகர், சுக்ரா சரவணன், சுந்தரபாண்டியன், கதிர்நாதன், கணேசன், காட்டுராஜா, சசி மற்றும் நிர்வாகிகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

The post திமுக செயல்வீரர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: