அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் அமமுகவினர் 30பேர் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி, செப்.29: அமமுக நிர்வாகி தலைமையில் 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.அமமுக தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளரும், 4வது வட்ட பிரதிநிதியுமான கண்ணன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி கலைஞர் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர அவைத்தலைவர் ஜேசுதாஸ், போல்பேட்டை பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், பகுதி பொருளாளர் உலகநாதன், வட்டச் செயலாளர் சதீஷ், மாமன்ற உறுப்பினர்கள் தெய்வேந்திரன், நாகேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

The post அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் அமமுகவினர் 30பேர் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: