இதை கண்டித்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் தலிபான் அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பரிந்துரையை நியூயார்க்கில் நடக்கும் ஐநா பொதுச் சபை கூட்டத்தில் முன்மொழிந்துள்ளன. இதற்கு 20 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளித்த தலிபான்களின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பிட்ராத் அளித்த பேட்டியில், ‘‘ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. யாரும் பாரபட்சமாக நடத்தப்படவில்லை. தப்பி ஓடிய சில பெண்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பிரசாரம் செய்து, நிலைமையை தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். ஷரியத் சட்டத்திற்கு ஏற்ப எங்களின் ஆட்சி நடக்கிறது’’ என கூறி உள்ளார்.
The post சர்வதேச நீதிமன்ற வழக்கு எதிரொலி ஆப்கானில் பெண்கள், சிறுமிகள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை: தலிபான் விளக்கம் appeared first on Dinakaran.