‘தமிழவேள்’ பி.டி.ராஜன் நினைவுநாள் மலர்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து


சென்னை: சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் 50வது ஆண்டு நினைவு நாளையொட்டி ‘தமிழவேள் பி.டி.ராஜன் நினைவுகளில் 50’ என்ற டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: திராவிட இயக்கத்தின் வேராக விளங்கும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான தமிழவேள் பி.டி.ராஜனுடைய 50ம் ஆண்டு நினைவு நாளில், அவரது வாழ்க்கையையும் அவரது தொண்டையும் பதிவு செய்யும் விதமாக உருவாகியுள்ள ‘தமிழவேள் பி.டி.ராஜன் நினைவுகளில் 50’ என்ற டிஜிட்டல் மலரை வெளியிட்டேன். அம்மலருக்கு நான் வழங்கிய வாழ்த்தையும் பகிர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ‘தமிழவேள்’ பி.டி.ராஜன் நினைவுநாள் மலர்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: