விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி போலீசில் புகார்


சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி சில நாட்களுக்கு முன்பு 18 ஆண்டு கால திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியும் பதிலுக்கு அறிவிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் ஜெயம் ரவி தனித்து எடுத்து முடிவு என்றும், இந்த முடிவு நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்தது இல்லை என் கூறியிருந்தார். ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், ஜெயம் ரவி ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் கடற்கரை சாலையில் உள்ள தனது மனைவி வசித்து வரும் வீட்டில் இருந்து தனது உடமைகளை எடுக்க வேண்டும்.

அதற்கு அவர் அனுமதி தரவில்லை. எனவே ஆர்த்தி வீட்டில் இருந்து தனது உடமைகளை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது உதவியாளர் மூலம், அடையார் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் ெஜயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயம் ரவி தனது மனைவியுடன் விவாகரத்து கோரிய நிலையில், மனைவி ஆர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: