சமுதாயக்கூடம் வேண்டி கலெக்டரிடம் மனு

 

தேனி, செப். 24: ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா காலனியில் சமுதாயக் கூடம் கட்ட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தேனி அருகே சுக்குவாடன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று, கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இம்மனுவில் கூறியிருப்பதாவது : ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சுக்குவாடன்பட்டி இந்திரா காலனியில் சுமார் 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஏழ்மை நிலையில் வசித்து வரும் எங்களுக்கு விசேஷ நாட்களில் விழா நடத்த வசதியில்லாமல் தெருக்களின் சாலைகளில் விழா நடத்தி வருகிறோம். எனவே, எங்கள் பகுதியில் சமுதாய கூடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

The post சமுதாயக்கூடம் வேண்டி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: