நாசரேத் நூலகத்தில் இலக்கிய கூட்டம்

நாசரேத், செப். 24: நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டம் நூலக அரங்கில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். நூலகர் பொன் ராதா முன்னிலை வகித்தார். நெல்லை கண்ணதாசன் இலக்கியப் பேரவைன் தலைவர் பாலகிருஷ்ணன், இலக்கிய இன்பம் என்ற பொருளில் பேசினார். பேராசிரியர் காசிராசன், எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள், பேரூராட்சி முன்னாள் நிர்வாக அதிகாரி மணிமொழிச் செல்வன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் மூக்குப்பீறி தேவதாசன் ஞான்ராஜ், சிவா, கணேசன், மருத்துவர் விஜய் ஆனந்த், சுரேஷ், அருள்ராஜ், செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். கண்ணன் நன்றி கூறினார்.

The post நாசரேத் நூலகத்தில் இலக்கிய கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: