உள்ளூர் மாணவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

அரிகேசவநல்லூரைச் சேர்ந்த விவசாயியான சங்கரசுப்பிரமணியன் கூறுகையில் ‘‘நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் டிப்ளமோ ஆட்டோ மொபைல்ஸ் ஒரு வருட படிப்பு படித்தேன். அப்போது விவசாய குடும்ப சூழல் காரணமாக வெளியூர் சென்று பணியாற்றும் வாய்ப்பினை இழந்து விவசாயம் செய்து வருகிறேன். தற்போது முக்கூடல், கல்லூர், வீரவநல்லூர் பகுதியிலேயே தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் சேரன்மகாதேவியில் அரசு ஐடிஐ அமைவதன் மூலம் உள்ளூர் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும்’’என்றார்.

The post உள்ளூர் மாணவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: