கதண்டு கடித்து 10 பேர் காயம்

 

மன்னார்குடி, செப். 21: திருவாரூர் மாவட்டம் வடுவூர் அடுத்த எடமேலையூர் வடக்கு கன்டியன் தெருவில் உள்ள புளிய மரம் ஒன்றில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. அந்த பகுதியில் நேற்றுமதியம் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நூறுநாள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் திடீரென பறந்து வந்து கொட்டியது.

இதில் நிலை குலைந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதில், எடமேலையூர் வடக்கு கன்டியன் தெருவை சேர்ந்த சின்னப்பொண்ணு (60), பஞ்சநாதன் (55), ராஜேந்திரன் (48) உள்ளிட்ட 10 தொழிலாளர்களை கதண் டுகளை துரத்தி, துரத்தி கடிதத்தில் படுகாயமடைந்தனர். காயம்பட்டவர்கள் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து வடுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கதண்டு கடித்து 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: