இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த தகராறில் 4 பேர் கைது

 

ஜெயங்கொண்டம், செப். 21: உடையார்பாளையம் அருகே இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இளமங்கலம் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்(28). அதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் மகன் பாலமுருகன்(30). இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த இறந்து போன சாமிதுரை யின் இறுதி ஊர்வலத்தில் வாணவெடி வெடித்து வந்தார். அப்போது அருகே அய்யப்பன் தனது குழந்தைகளுடன் நின்ற போது வெடி சத்தத்தில் அதிர்ந்தார்.

இது குறித்து பாலமுருகனிடம் அய்யப்பன் கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, பாலமுருகன் தரப்பில் அறிவழகன் மகன் அருள்பாண்டியன், ராசகண்ணு மகன் அறிவழகன் ஆகியோரும் அய்யப்பன் தரப்பில் கதிர்வேல் மகன் வேல்முருகன்,செல்வகுமார் மகன் சிவனேசன் ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக .

இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் அய்யப்பன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இரு தரப்பினரும் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இரு தரப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த தகராறில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: