மனு கொடுக்கும் போராட்டம்

சிவகங்கை, செப்.17: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம்(சிஐடியு) சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை நகராட்சியில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட மூன்று தூய்மை பணியாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் பணி செய்ய ஆணை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத்தலைவர் வீரையா தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

The post மனு கொடுக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: